tamilnadu

வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு வரப்பட்ட இயந்திரங்கள்

 வேலூர், ஆக. 6 - வேலூர் நாடாளுமன்ற தேர்தல் திங்கள் மாலை யுடன் முடிவடைந்த நிலை யில், வாக்குப்பதிவு இயந்தி ரங்கள், பலத்த பாது காப்புடன் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு வரப்பட்டு அறைகளில் வைத்துப் பூட்டி சீல்வைக்கப் பட்டன. நடைபெற்று முடிந்த இந்தத் தேர்தலில் 72 விழு க்காடு வாக்குகள் பதிவான நிலையில், வரும் 9ஆம் தேதி வாலாஜாபேட்டையிலுள்ள ராணிப்பேட்டை பொறி யியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற விருக்கிறது. இதற்காக வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்குப்பதிவு இய ந்திரங்கள் பலத்த பாது காப்புடன் கல்லூரியில் கொண்டுவந்து வைக்கும் பணி விடிய விடிய நடைபெற்றது.  மொத்தம் ஆயிரத்து 553 வாக்குச்சாவடிகளிலிருந்து 3 ஆயிரத்து 732 வாக்கு இயந்திரங்கள் மற்றும் 2 ஆயிரத்து 99 விவிபேட் இயந்திரங்கள் வாகனங்கள் மூலம் கொண்டுவரப்பட்டன. பின்னர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் 6 அறைகளில் வைத்து சீலிடப்பட்டன. அங்கு துணை ராணுவப் படையினரும் காவல்துறையினரும் பாது காப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.