வேலூர், பிப். 9- தமிழக அரசு சமீபத்தில் வேலூர் மாவட்டத்தை வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என 3 மாவட்டங்களாக பிரித்தன. இதையடுத்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்ட புதிய மாவட்ட அமைப்பு துவக்க விழா, பொதுக்குழு கூட்டம் மாவட்ட அமைப் பாளர் கோ.மோகனமூர்த்தி தலைமையில் நடை பெற்றது. பொதுக்குழுவை துவக்கி வைத்து, புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வேலூர் மாவட்டத் தலைவர் க.சரவணராஜ் பேசினார். வேலூர் மாவட்ட முன்னாள் தலைவர்கள் சுந்த ரேசன், குப்பன், தினகரன், முன்னாள் மாவட்டச் செய லாளர் செ.வெங்கடாசலம், வேலூர் மாவட்டச் செய லாளர் மோ.ஜெயசீலன், ஓய்வூதியர் சங்க மாநில பொதுச்செயலாளர் பி.கிருஷ்ண மூர்த்தி ஆகி யோர் பேரவையில் வாழ்த்திப் பேசினர். மாநில துணைத்தலைவர் மோ. ஞானத்தம்பி பேரவையை நிறைவு செய்து பேசினார். புதிய மாவட்டத் தலைவ ராக எஸ்.ஜோசப் கென்னடி, செயலாளராக கோ.மோகன மூர்த்தி, பொருளாளராக செல்வகுமார், துணைத் தலைவர்களாக பாபு, பார்த்திபன், பொன்.வேத முத்து, செல்வம், துணைச் செயலாளர்களாக சரவ ணன், ஆறுமுகம், கார்த்தீபன், தினேஷ், தணிக்கையாளர்களாக அரவிந்தன், கங்காதரன் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்ட னர். புதிதாக தோற்று விக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு நிரந்தர அரசு பணியிடங்களும், தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும், ஏற்கனவே உள்ள ஆற்காடு, வாலாஜா, அரக்கோணம் ஆகிய வட்டங்களுடன் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட சோளிங்கர், கலவை ஆகிய இரண்டு வட்டங்களை சேர்த்து அனைத்திலும் வட்டக் கிளை அமைப்பு களை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர் மானங்கள் நிறைவேற்றப் பட்டன.