14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவங்கிட வேண்டும் என வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் வேலூர் மண்டல அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தொமுச பொதுச் செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். தொமுச பொருளாளர் கிருஷ்ணன், பாலகிருஷ்ணன், தேவராஜ்,சிஐடியு பரசுராமன், ரவிச்சந்திரன், ஏஐடியுசி ராமதாஸ், டிடிஎஸ்எப் தண்டபாணி, எச்எம்எஸ் சந்திரசேகரன், எம்எல்எப் திருநாவுக்கரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.