tamilnadu

‘குடிநீருக்காக மறியல் செய்தால் கைது செய்வோம்’ மிரட்டும் காவல்துறை

வேலூர், ஜூன் 11- வேலூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த துத்திப்பட்டு அம்பேத்கர் நகரில், கடந்த ஆறு மாதமாக குடிநீர் விநியோகம் இல்லை. அதிகாரிகளிடம் முறையிட்டும் குடிநீர் பிரச்சனையை தீர்க்கவில்லை. இதனால் , பொது மக்கள் துத்திப்பட்டு பிரதான சாலையில், மறியல் செய்தனர். துத்திப்பட்டு ஊராட்சி செயலாளர் ரமேஷ்,(45), நடத்திய பேச்சு வார்த்தைக்கு பிறகு, மறியலை கைவிடப்பட்டது.  போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியல் செய்ததாக  துத்திப்பட்டு அம்பேத்கர் நகரை சேர்ந்த, 20 பெண்கள் உள்பட 60 பேர் மீது, உம்மராபாத் காவல்துறையினர்  வழக்குப் பதிவு செய்து கைது செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனையறிந்த அந்த மக்கள் தலைமறைவாகி விட்டனர்.  “குடிநீருக்காக, சாலை மறியல் செய்தால், கைது செய்வோம்,” என, காவல்துறையினர்  மிரட்டல் விடுத்துள்ளனர்.கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் குடிப்பற்குகூட தண்ணீர் கிடைக்காமல் அல்லப்படும் மக்களுக்கு துணை நிற்காமல் அந்த மக்களை மிரட்டும் காவல்துறைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.