tamilnadu

img

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு - தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்

சென்னை,ஆக.19- ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதனன்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை என்றும், அந்த ஆலைக்கு தமிழக அரசு ‘சீல்’ வைத்தது செல்லும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  வேதாந்தா நிறுவனத்தின் வழக்கை தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு சார்பில்  உச்சநீதிமன்றத்தில் புதனன்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் மேல்முறையீடு செய்தால் எங்களது கருத்தையும் கேட்க வேண்டும் என்றும் தங்களை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.