சென்னை, மே 2- தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் அதி கரித்து வரும் வைரஸ் தொற்றை தடுப்பதற்காக ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் சிறப்புக் குழு ஒன்றை தமிழக அரசு அறிவித்துள் ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக, தமிழகத்தின் வேறு எந்த மாவட்டத்தி லும் இல்லாத வகையில் தலைநகர் சென்னை யில் கொரோனா பாசிட்டிவாகும் நபர்களின் எண்ணிக்கை 1000-த்தை தொட்டு உச்சத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது தமிழக அரசு.
அந்த வகையில் சென்னை யில் வைரஸைக் கட்டுப்படுத்த வருவாய் நிர்வாக ஆணையர் ராதா கிருஷ்ணன் தலைமையில் 5 ஐ.ஏ.எஸ் அதிகாரி கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் சண்மு கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``சென்னை யில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த வரு வாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தலை மையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு தொடர்பாக அரசு அறி விக்கும் திட்டங்களைத் தங்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ள மண்டலங்களுக்குத் துரிதமாக எடுத்துச் செல்வது, தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான அத்தியாவ சிய பொருள்களை வழங்குவது, முறையான சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதைக் கண்காணிப்பது போன்ற அனைத்துப் பணிகளை யும் இந்தக் குழு மேற்கொள்ளவுள்ளது.