tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ்பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ்பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செங்கம் பேருந்து நிலையம் அருகே கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.  இதில் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, சிபிஎம் தாலுகா செயலாளர்  எ.இலட்சுமணன், வாலிபர் சங்கத்தின் தாலுகா செயலாளர்  சிஎம்.பிரகாஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

                                               **************************

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வேலூர் பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார்  தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.பி.ராமச்சந்திரன், ந.சுப்பிரமணி (மதிமுக), டீக்கா ராமன் (காங்கிரஸ்), ஜான்பாஷா (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.