tamilnadu

img

வேலூர்: ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளை

வேலூரில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் பின்பக்க சுவற்றில் துளையிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு உள்ளிட்டோர் ஆய்வு செய்து மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடையில் எஞ்சி இருக்கும் நகைகளை கணக்கிடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் பின்னரே எவ்வளவு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

;