தீபாவளி பட்டாசு வெடித்து 6 இடங்களில் தீ விபத்து புதுச்சேரி, அக். 28- புதுவையில் ஞாயிறன்று (அக். 27) தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபா வளி தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்பே பட்டாசு வெடிக்கத் தொடங்கி தீபாவளி அன்று இரவு 12 மணி வரை பட்டாசு வெடிப் பது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக உச்சநீதி மன்ற தீர்ப்பின் எதிரொலி யாகவும், அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம், போனஸ் வழங்காததின் காரணமாகவும் தீபாவளி பட்டாசு வெடிப்புகள் அவ்வ ளவாக களைகட்டவில்லை. ஆயினும் ஒரு சில இடங்க ளில் பட்டாசுகள் வெடிக்கப் பட்டன. பட்டாசு வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சில இடங்களில் வீடுகள், மரங் கள் தீப் பிடித்து எரிந்தன. புதுவை வம்பாகீரப் பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரது கூரை வீட்டில் ராக்கெட் பட்டாசு விழுந்ததில் வீடு தீப்பிடித்து எரிந்தது. அங்காளம்மன் நகரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது கூரை வீட்டில் பட்டாசு வெடித்து தீப்பொறி விழுந்ததில் தீ விபத்து ஏற்பட்டது. அருகில் இருந்த வர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். முருங்கப்பாக்கம் அன்னை தெரேசா நகரில் குணசீலன் என்பவரது கோழிக்கடை கூரை மீது பட்டாசு விழுந்ததில் தீப் பிடித்து எரிந்தது. இதில் கூரை மட்டும் சேதமடைந் தது. காலாப்பட்டு பிள்ளைச் சாவடியில் விஜயன் என்பவ ரது கூரை வீடு எரிந்து சேத மானது. திருபுவனையில் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் கடையில் தீ விபத்து ஏற் பட்டதில் அங்கிருந்த பிளாஸ் டிக் பொருட்கள் எரிந்து நாசமாயின. பாகூரில் விசா லாட்சி என்பவரது கூரை வீடு எரிந்தது. திருக்கனூர் மணவெளி யில் தென்னை மரம் ஒன்றின் மீது பட்டாசு வெடித்ததில் தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது. இதேபோல் மண மேடு பகுதியில் சரவணன் என்பவரது தென்னை மரத் தில் ராக்கெட் விழுந்து தீ விபத்து ஏற்பட்டது.
வேலூா் சிறையில் முருகன், நளினி உண்ணாநிலை வேலூர், அக். 28- வேலூா் மத்திய சிறையில் உண்ணாநிலை யில் ஈடுபட்டுள்ள முருகனின் உடல்நலன் மீது சிறை நிர்வாகம் அக்கறை செலுத்தவில்லை என குற்றஞ்சாட்டியுள்ள நளினி சனிக்கிழமை அதிகாலை முதல் உண்ணாவிரதத்தில் ஈடு பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞா் புக ழேந்தி தெரிவித்தார். முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன், அவரது மனைவி நளினி உட்பட 7 போ் கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இதில், வேலூர் மத்திய சிறையில் முருக னும், பெண்கள் தனிச்சிறையில் நளினியும் சிறை தண்டனை அனுபவித்து வரு கின்றனர். இந்நிலையில், சிறையில் நளினி சனிக்கிழமை காலை 6 மணி முதல் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கி இருப்பதாக அவரது வழக்கறிஞா் புகழேந்தி தெரிவித்தார். வேலூர் மத்திய சிறையில் முருகன் அடைக்கப்பட்டுள்ள அறையில் இருந்து கடந்த 18ஆம் தேதி செல்போன் கண்டு பிடிக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பாகாயம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து முரு கன் தனிச் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த அறையில் இரண்டு தினங்களுக்கு பின் நடத்தப்பட்ட சோதனையில் சிம்கார்டு கைப் பற்றப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்து, முருகனுக்கு அளித்து வந்த சலுகைகளை சிறை நிர்வாகம் ரத்து செய்தது. இந்த தொடா் நடவடிக்கைகளால் மனஉளைச்சலுக்கு ஆளான முருகன் கடந்த 20ஆம் தேதி முதல் சிறையில் உண்ணா நிலை இருந்து வருகிறார். உண்ணாநிலை இருந்து வரும் முரு கனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. முருகன், நளினி விடுதலை குறித்து பேச்சு எழுப்பப்படும் போதெல்லாம் அவருக்கு எதி ராக சிறை நிர்வாகம் பல்வேறு இடையூறு களை செய்து வருகிறது. இதன் உண்மை நிலையை விசாரித்து முருகனுக்கு பாது காப்பு அளிக்க வேண்டும் என விரைவில் தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம் என வழக்கறிஞர் கூறினார்.
விபத்தில் ஆயுதப்படை காவலர் பலி
சென்னை, அக். 28- சிவகங்கை மாவட் டத்தை சேர்ந்தவர் நல்லு சாமி (32). இவர் சென்னை பரங்கிமலை ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் தங்கி யிருந்து, ஆயுதப்படையில் காவலராக வேலை செய்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு பரங்கிமலை கரையார் கோயில் தெருவில் ஒரு ஓட்டலில் வேலைபார்க்கும் பிகாஷ் (19) என்பவருடன் போரூரில் உள்ள நண்பரை பார்க்க மோட்டர் பைக்கில் சென்றார். மவுண்ட் - பூந்த மல்லி சாலையில் நந்தம் பாக்கம் அருகே சென்று கொண்டிருக்கும் போது கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரங்கி மலை போக்குவரத்து புல னாய்வுப் பிரிவு காவல் துறை யினர் சென்று இருவரையும் மீட்டு, மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் காவலர் நல்லுசாமி வழி யிலேயே இறந்துவிட்டார். படுகாயம் அடைந்த பிகா ஷூக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்து வமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி காவல் துறையி னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.