வேலூரில் கடந்த 5ம் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 12 மணி நேர நிலவரப்படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்12158 வாக்குகள் வித்தியாசத்தில் முதல் இடத்தில் உள்ளார்.
வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் இவர்கள் உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.
இன்று காலை 8 மணிக்கு ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 12 மணிநேர நிலவரப்படி அதிமுக வேட்பாளர் 275748 வாக்குகள் பெற்றுள்ளார். இந்நிலையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 287906 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். 12158 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலையில் உள்ளது.
நாம் தமிழர் தீபலட்சுமி 13942வாக்குகள் பெற்றுள்ளார்.