tamilnadu

img

வேலூர் சிறையில் உண்ணாநிலையை தொடரும் முருகன்

வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் சிறையில் 24-வது நாளாக உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன்,  செல்போன் வாட்ஸ் அப் வீடியோ காலில் மனைவி நளினி மற்றும் உறவினர்களிடம் பேச அனுமதிக்கும்படி சிறை நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தார்.ஆனால் இதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. இதனால் முருகன் ஜீவசமாதி அடைய வேண்டி கடந்த 1ஆம் தேதி முதல் சிறையில் உண்ணாநிலை இருந்து வருகிறார். அவரின் உடல்நிலையை டாக்டர் கள் தினமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர் 24-வது நாளாக உண்ணாநிலைப் போராட்டத்தை கடைபிடித்து வருகிறார்.

;