வேலூர், ஜூன் 17- திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, பாகா யம், வாலாஜா ஆகிய 4 காவல் நிலையங்க ளின் உதவி ஆய்வாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் பாகாயம் காவல் நிலை யத்தில் உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று புதனன்று (ஜூன் 17) உறுதி செய்யப்பட்டது. அதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஒருவருக்கும், திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 4 காவல் நிலையங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அதிகாரிகள் மற்றும் உதவி ஆய்வாளருடன் பணி புரிந்தவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் தற்போது தொற்று அதிகரித்து வருவதையடுத்து, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடைகள் 2 மணியுடனும், வேலூர் மாவட்டத்தில் 3 மணி யுடனும் கடைகளை மூட உத்தர விடப்பட்டுள்ளது.