ராணிப்பேட்டை, ஆக. 11- ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் ரூ.10 லட்சம் வரை நிதி உதவி பெற்று பயனடையலாம் என்று ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமரின் சுயசார்பு பொருளாதார திட்டத்தின் கீழ் ஒரு சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனம், தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை நிதி உதவி பெற்று பயன்பெறலாம். வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். மேலும், சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு தேவைப்படும் தொழில் கடன் தொகை, வங்கி மூலம் ஏற்பாடு செய்து தரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.