வேலூர், மே 23- கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில் மாநில துணைச் செயலாளர் ஆர்.வெங்கடே சன், நிர்வாகிகள் கே.சிவக்குமார், சுரேஷ், ஏழுமலை ஆகியோர் ஆட்சியர் அலுவல கத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசா யத்திற்கு அடுத்தபடியாக விசைத்தறி தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தறி ஓட்டுனர்கள், சாயம் போடுபவர், நூலி ழைப்பவர், பாபு பினைப்பவர்கள், பிளேடு போடுபவர், பீஸ் பிடிப்பவர்கள், ஆலை ஓட்டு நர்கள் என சுமார் 2.5 லட்சம் பேர் வேலை செய்கின்றனர்.
இவர்கள் நெமிலி, அரக்கோணம், சோளிங்கர், வாலாஜா, ஆற்காடு தாலுக்கா களில் பரவலாக உள்ளனர். கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக கடந்த 2 மாத காலமாக வேலை இல்லாமல் விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். அரசு தற்போது விசைத்தறி தொழிலா ளர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவித்து வழங்கி வருகின்றது. ஆனால் நலவாரியத்தில் பதிவு செய்த பலருக்கும் நிவா ரணத் தொகை கிடைக்கவில்லை. மேலும் நலவாரியத்தில் பதிவு செய்யாத தொழிலா ளர்கள் பலர் உள்ளனர். தொழில் முழுவதும் முடங்கி போய் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் சூழலில் அரசு முறையாக கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் முறையாக கணக்கெடுத்து உடனடியாக குறைந்தபட்சம் மாதம் 5 ஆயிரம் ரூபாயும், ரேஷன் கடை மூலம் நிவாரணப் பொருட்கள் கூடுதலாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.