tamilnadu

img

பட்டாசு கடையில் தீ விபத்து... 2 குழந்தைகள் உள்பட 3 பேர் பலி..

வேலூர்
வேலூர் மாவட்டம் லத்தேரி பேருந்து நிலையம் அருகே பட்டாசு கடையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் பலியாகினர். 

வேலூர் மாவட்டம் லத்தேரி பேருந்து நிலையத்தில் மோகன்என்பவருக்கு சொந்தமான பட்டாசுக் கடை உள்ளது. இக்கடையில் ஞாயிறன்று பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கடை உரிமையாளர் மோகன் மற்றும் அவரது 2 பேரக்குழந்தைகள் என மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், கடை முழுமையாக எரிந்து சேதமடைந்துள்ளதாகவும், பத்துக்கும்மேற்பட்ட இருசக்கர வாகனங்கள்தீயில் எரிந்து சேதமடைந்துள்ள தாகவும் தகவல் தெரிவிக்கப்படு கிறது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  தீயணைப்புத்துறை யினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வாகனம்  தாமதமாக வந்தது என்று பொதுமக்கள்  குற்றம் சாட்டினர். இந்த தீ விபத்து குறித்து காட்பாடி டிஎஸ்பி விசாரணை நடத்தி வருகிறார். 
 

;