tamilnadu

img

ஆர்ப்பாட்டம்...

வேலூர் மாவட்டம் லாலாப்பேட்டை பாசகுளத்தை தூர் வார வேண்டும், கழிவு நீர் கால்வாய் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேருந்து நிலையம்  எதிரே நடந்த  ஆர்ப்பாட்டத்திற்கு டி.சண்முகம் தலைமை தாங்கினார். வாலாஜா செயலாளர் என்.ரமேஷ், மாவட்டக் குழு உறுப்பினர் எல்.சி.மணி, மாதர் சங்க நிர்வாகி பத்மா மணி, வாலிபர் சங்கத் தலைவர் ஜெயகாந்தன், ராணிப்பேட்டை நகரச் செயலாளர் மணிகண்டன் ஆகியோர் உரையாற்றினர்.

*****************

 திமிரி ஒன்றியத்தின் ஆரூர் ஊராட்சி கன்னிகாபுரம்  கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி சிபிஎம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு செயலாளர் வள்ளி தலைமை வகித்தார். தனசேகரன், செல்வி, ஆர்.ரகுபதி மற்றும் பலர் உரையாற்றினர்.