வேலூர், ஆக. 19- கட்டி முடித்து பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் இருந்த அரியூர் ரயில்வே மேம்பாலத்தை பொதுமக்களே திறந்து வைத்ததால் கடந்த 5 ஆண்டுகளாக நிலவி வந்த போக்குவரத்துப் பிரசச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. வேலூர் மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வேலூர்- பெங்களூரு சாலையில் டவுன் ரயில் நிலையம் அருகே கஸ்பா பகுதியிலும், அரியூர் தங்கக்கோயில் செல்லும் சாலையில் தொரப்பாடியிலும் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க வேண் டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில், கஸ்பா பகுதியில் ரூ. 17.50 கோடி மதிப்பீட்டிலும், தொரப்பாடியில் ரூ. 22.93 கோடி மதிப்பீட்டிலும் ரயில்வே மேம்பா லம் கட்டும் பணி கடந்த 2016-ஆம் ஆண்டு முறையே பிப்ரவரி மற்றும் ஜூலை மாதங்க ளில் தொடங்கப்பட்டன. இவ்விரு பாலங்கள் கட்டும் பணி 3 ஆண்டு களாகியும் நிறைவு பெறாததால் வாகனங்கள் சுமார் 10 கி.மீ தூரம் சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து, பாலம் கட்டு மானப் பணிகளை விரைவுபடுத்தக் கோரி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை யும் நடத்தி வந்தனர். இதையடுத்து, மேம் பாலம் கட்டுமானப் பணிகள் விரைவு படுத்தப்பட்டு தொரப்பாடி ரயில்வே மேம் பாலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிக்கப்பட்டன. எனினும், இதுவரை அந்த பாலங்கள் மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப் படாமல் இருந்து வந்தது. இதனால் ஸ்ரீபுரம் செல்லும் பக்தர்களும், அணைக்கட்டு, ஒடுக்கத்தூர் பகுதிகளுக்குச் செல்வோரும் சுமார் 10 கி.மீ தூரம் சுற்றிச்செல்ல வேண்டிய நிலை நீடித்து வந்தது. கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலம் மக்களின் பயன்பாட்டிற்குத் திறக்கப்படாத நிலையில் பாலத்தை விரைவில் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து காலதாமதம் செய்யப்பட்டு வந்ததால் ஆவேசமடைந்த பொதுமக்கள், தொரப்பாடி ரயில்வே மேம்பாலத்தின் இரு புறமும் கட்டப்பட்டிருந்த தடுப்புச்சுவர் களை அகற்றி ரயில்வே மேம்பாலத்தை பயன் பாட்டுக்குக் கொண்டு வந்தனர். இதை யடுத்து, கார், ஆட்டோ, இருசக்கர வாகனங் கள் மட்டுமின்றி அரசு, தனியார் பேருந்து களும் இந்த மேம்பாலத்தின் வழியே இயக்கப் பட்டன. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்ததுடன், நீண்டகாலமாக நீடித்து வந்த போக்குவரத்துப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளியும் வைக்கப்பட்டது.