tamilnadu

img

வில் வித்தையில் தங்கம் வென்ற ஆம்பூர் மாணவன்

 வேலூர், அக். 9- தமிழ்நாடு வில்வித்தை சங்கம் சார்பில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி சென்னை அடையார் எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை தமிழ்நாடு மாநில வில்வித்தை சங்கத்தின் பொதுச்செயலாளர் ஷிகான் உசைனி தலைமையில் நடைபெற்றது. சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆம்பூர் அருகே அழிஞ்சிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த மாணவன் பி. சாருகேஷ் ஜூனியர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றான். ஆம்பூர் தக்ஷிலா குளோபல் பள்ளி மாணவர்கள் டி. லோகித், ஆர். ஆதவன், சுஜித் ஆகியோர் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்தனர்.  தங்கம் வென்ற மாணவரையும், சிறப்பிடம் பெற்ற மாணவர்களையும் வேலூர் மாவட்ட வில்வித்தை சங்கத்தின் பொதுச்செயலாளரும் பயிற்சியாளருமான ஜி. ரமேஷ் கண்ணா பாராட்டினார்.

;