tamilnadu

img

ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறந்து பணிகளை துவங்க கோரிக்கை

வேலூர், ஜூலை 20- மத்திய மாநில அரசுகள் 2020-21 ஆண்டுக்கு கரும்பு டன் ஒன்றுக்கு ரூபாய் 4,500  விலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் திங்க ளன்று (ஜுலை 20) வேலூர் கூட்டுறவு சர்க்  கரை ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.   கிளைத் தலைவர் ஸ்ரீதரன் தலைமையில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்   மாவட்டத் தலைவர் எல்.சி.மணி, செயலாளர் ராஜா னந்தம், பொருளாளர் கண்ணையன்,  கணே சன், கண்ணன் ஆகியோர் பேசினர். அதேபோல் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை  ஆலை அலுவலகம் முன்பும், பென்னாத்தூர்  கிளை அலுவலகம் முன்பும் கிளைத் தலை வர் கோவிந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ப.சக்திவேல், மாவட்டப் பொருளாளர் சி.எஸ்.மகாலிங்கம்,  கரும்பு விவசாயிகள் சங்க கிளைச் செயலா ளர் கே.சாமிநாதன் நிர்வாகிகள் ஜி.நரசிம்மன்,  வி.அருள்சீனிவாசன், பி.குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வேலூர் ஆம்பூர் கூட்டுறவு ஆலையை  திறந்து அரவைப் பணிகளை துவக்க  வேண்டும், வண்டி வாடகை, வெட்டுக் கூலியை ஆலை நிர்வாகங்களே ஏற்றுக் கொள்ள வேண்டும், வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2004 -2005ஆம் ஆண்டின்  லாபத்தின் பங்கீட்டு தொகை ரூ.1.45 கோடியை உடனே வழங்க வேண்டும், 2019-20ஆம்  ஆண்டின் கரும்பு பாக்கித் தொகை ரூ.5 கோடியை உடனே வழங்க வேண்டும், எஸ்.ஏ.பி. பாக்கித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.