tamilnadu

img

வேலூர் துணை ஆட்சியரின் 5 வங்கிக் கணக்குகள் முடக்கம்

வேலூர், மார்ச் 3- வேலூர் தனித்துணை ஆட்சியர் தினகரனின் 5  வங்கி கணக்குகள் முடக்கப்  பட்டுள்ளது. மேலும் அவர்  வாங்கிய சொத்துக்கள் குறித்  தும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். வேலூர் முத்திரைத்தாள் தனித் துணை ஆட்சியர் தின கரன். இவர் போளூர் அருகே  உள்ள இரும்புலி கிராமத் தைச் சேர்ந்த ரஞ்சித் குமார்  என்ற விவசாயியிடம் அவ ரது பத்திரத்தை விடுவிக்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்  டுள்ளார். இதுபற்றி ரஞ்சித் குமார் வேலூர் லஞ்ச ஒழிப்பு  காவல்துறைக்கு புகார் அளித்தார்.

கடந்த 27 ஆம் தேதி இரவு  வேலூர் ஆட்சியர் அலுவல கம் அருகே காரில் இருந்த படி ரஞ்சித்குமாரிடம் ரூ.50  ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை ஆட்சியர் தினகரனை  லஞ்ச ஒழிப்பு காவலர்கள் விரட்  டிப் பிடித்து கைது செய்தனர். வேலூர் ஆட்சியர் அலு வலகத்தில் உள்ள அவரு டைய அறையில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் சிக்கியது. மேலும் காட்பாடி அருகே உள்ள தாங்கல் கிரா மத்தில் உள்ள துணை ஆட்சி யர் தினகரன் வீட்டில் சோதனை செய்தனர். அங்கு இருந்த டிரங்க் பெட்டியில் கட்டுக் கட்டாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்த பணம் சிக்கியது. மொத்தம் ரூ.79 லட்சத்து 9 ஆயிரத்து 200 பறிமுதல் செய்தனர். மேலும் போளூரில் உள்ள அவரது வீட்டில் நடந்த சோதனையில் அவர் வாங் கிக் குவித்துள்ள சொத்து ஆவணங்கள் சிக்கின. அவற்  றையும் பறிமுதல் செய்தனர்.

துணை ஆட்சியர் தினக ரன் 5 வங்கிகளில் வங்கிக் கணக்கு வைத்துள்ளார். இந்த வங்கிக் கணக்குகள் அனைத்தையும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் முடக்கி வைத்துள்ளனர். மேலும் தினகரன் வாங்கிய  சொத்துக்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகின்ற னர். வேலூர், திருவண்ணா மலை மாவட்டத்தில் உள்ள  பத்திரப் பதிவு அலுவலகங்க ளில் இதுகுறித்து அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. தினகரன் கடந்த 2018  ஆம் ஆண்டு வேலூர் முத்தி ரைத்தாள் தனித்துணை ஆட்சியராக பதவி உயர்வு  பெற்று பணிக்கு வந்தார்.  அவர் பணியில் சேர்ந்த நாள்  முதலே லஞ்சம் வாங்குவதில் கை தேர்ந்தவராக செயல் பட்டுள்ளார். 2 ஆண்டுகளில் அவர் கோடிக்கணக்கிலான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். இதனால் தினகரனை சஸ்பெண்டு செய்வதற்கான நடவடிக்கை களை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.