tamilnadu

img

பாகிஸ்தானுக்கு வெண்டிலேட்டர்.... அமெரிக்கா ஒப்புதல் 

வாஷிங்டன்
இந்தியாவின் மேற்கு பகுதி அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அங்கு இதுவரை 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 800-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு விரைவில் வெண்டிலேட்டர் அனுப்பிவைப்போம் என அந்நாட்டு ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது," வெண்டிலேட்டர் தேவை குறித்து உலக தலைவர்களுடன் பேசியுள்ளேன். எனவே அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய அமெரிக்கா உதவும் என்று கூறியுள்ளேன். அந்த வகையில், பாகிஸ்தானுக்கு வெண்டிலேட்டர் அனுப்பி வைப்போம். மேலும் ஸ்பெயின், இத்தாலி, மெக்சிகோ, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கும் வெண்டிலேட்டர்கள் அனுப்பி வைப்போம்" என அவர் கூறியுள்ளார். 
 

;