ஸ்டாக்ஹோம்:
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றாகக் கூறப்படும் இந்தியாவில் ஜனநாயகம் பலவீனமடைந்து வருகிறது என ஸ்வீடனில் இருந்து இயங்கும் வி-டெம் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனம் தனதுஆய்வு அறிக்கையில் கூறியுள்ளது.வி-டெம் இன்ஸ்டிடியூட் ‘2020 ஜனநாயக அறிக்கை’ ஒன்றை வெளியிட்டுள்ளது. அது இந்தியாவைப் பற்றியது மட்டுமல்ல. உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் குறித்தமதிப்பீடு இந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு 2020 ஜனவரியில் நடத்தப்பட்டது, 165 நாடுகளில் 665 வல்லுநர்கள் தங்கள் சொந்த நாடுகளில் உள்ள கட்சிகளை மதிப்பீடு செய்துள்ளனர்.இந்த அறிக்கையைத் தயாரிக்கும் ஸ்வீடனின் கோதன்பெர்க் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய வி-டெம் இன்ஸ்டிடியூட் அதிகாரிகள், இந்தியாவில் ஜனநாயகம் மோசமடைந்து வருவதைப் பற்றி தாங்கள் கவலைகொண்டுள்ளதாகக் கூறுகின்றனர்.அறிக்கையில், ‘தாராளவாத ஜனநாயக குறியீட்டில்’ 179 நாடுகளில் இந்தியா, 90வது இடத்திலும், டென்மார்க் முதலிடத்திலும் உள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.இந்தியாவின் அண்டை நாடான இலங்கை 70 வது இடத்திலும், நேபாளம் 72 வது இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில், பாகிஸ்தான் இந்தியாவை விட கீழே 126 வது இடத்திலும், வங்காளதேசம் 154 வது இடத்திலும் உள்ளன.
அறிக்கையில் இந்தியா குறித்து தனி அத்தியாயம் எதுவும் இல்லை. ஆனால் ஊடகங்கள், சிவில் சமூகம் மற்றும் மோடி அரசில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கான இடம் குறைந்து வருவதாக அது கூறுகிறது.இதன் காரணமாக இந்தியா ஒரு ஜனநாயகம் என்ற தகுதியை இழப்பதற்கான ஆபத்தின் விளிம்பில் இருக்கிறது.இந்த அறிக்கையைத் தயாரிக்கும் போது உலகளாவிய தரங்களும் உள்ளூர்தகவல்களும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன என்று வி-டெம் நிறுவனத்தின் அதிகாரிகள் கூறுகின்றனர். சிக்கலான அறிக்கைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளதால், தங்கள் அறிக்கைமற்ற அறிக்கைகளிலிருந்து வேறுபட்டது என்று அந்த நிறுவனம் உறுதிபடக் கூறுகிறது.
தரவுகள், தரவு பகுப்பாய்வு, கிராபிக்ஸ், விளக்கப்படங்கள் மற்றும் வரைபடங்கள் விரிவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை அறிக்கையை பார்க்கும்போது தெரியவருகிறது.வி-டெம் அறிக்கையின்படி, ஜி 20 அமைப்பின் அனைத்து முக்கிய நாடுகளும், உலகின் அனைத்து பிராந்தியங்களும் இப்போது ‘சர்வாதிகாரத்தின் மூன்றாவது அலை’க்கு ஆளாகியுள்ளன. இதன் கீழ் இந்தியா, பிரேசில், அமெரிக்கா மற்றும் துருக்கியும் வந்துள்ளன. இந்த நிறுவனத்தின் இயக்குனர் ஸ்டீபன் லிண்ட்பெர்க் கூறியதாவது:- ஜனநாயகத்தின் தூண்கள். பலவும் இந்தியாவில் பலவீனமடைந்து வருகின்றன. மோடி ஆட்சிக்கு வருவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த குறியீடுகள் சில குறையத் தொடங்கின. ஆனால்உண்மையில், 2014ல் மோடி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் மாபெரும் சரிவு ஏற்பட்டது.
இதன் முக்கிய குறியீடுகள் - கருத்து சுதந்திரம், ஊடக சுதந்திரம், சிவில் சமூகத்தின் சுதந்திரம், தேர்தல்களின் தரம், ஊடகங்களில் மாறுபட்ட கருத்துகளின் இடம் மற்றும் கல்வியில் சுதந்திரம் ஆகியவை ஆகும்.கடந்த ஐந்து முதல் எட்டு ஆண்டுகளில் நிலைமை மோசமடைந்துள்ளது என்று நான்நினைக்கிறேன். ஜனநாயகம் என்று அழைக்கப்படாத நாடுகளின் பிரிவுக்கு மிக நெருக்கமாக இப்போது இந்தியா உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.