tamilnadu

img

செல்பி எடுக்க ஒத்துழைக்க மறுத்த விமான பணிப்பெண் மீது தாக்குதல்

வியட்நாமில் குடிபோதையில் இருந்த பயணிகளுடன் செல்ஃபி எடுக்க மறுத்த விமான பணிப்பெண்ணை தாக்கியவர்களுக்கு  சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வியட்னாமின் தன் ஹோவாவில் உள்ள தோ சுவான் விமான நிலையத்தில் வியட்ஜெட் ஏர் நிறுவனப் பணிப்பெண்ணாக உள்ளவர் லெ தி ஜியாங் .  அவருடன் இணைந்து 3 பயணிகள் செல்பி எடுக்க விரும்பினர்.  இதைத்தொடர்ந்து அவரும் சம்மதித்து படம் எடுத்த சிறிது நேரத்தில் மீண்டும் வந்து மற்றொரு செல்ஃபி எடுக்க வேண்டும் என கோரினர். தான் தற்போது பணியில் இருப்பதாக கூறி மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் அவரை உதைத்து கீழே தள்ளி கடுமையாக திட்டினர்.
இச்சம்பவத்தை அடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு முறையே மூன்று ஆண்டுகள், 2 ஆண்டுகள் 10 மாதம், 1 ஆண்டு 10 மாதம் என சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 

;