tamilnadu

img

விழுப்புரம்: ஒரே குடும்பத்தில் கொரோனாவிற்கு 3 பேர் பலி

விழுப்புரம்:
விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக ஞாயிற்றுக்கிழமை மட்டும் 4 பேர் உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 56,845 ஆக உயர்ந்துள்ளது.இந்நிலையில் விழுப்புரம் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக ஞாயிற்றுக்கிழமை மட்டும் 4 பேர் உயிரிழந்தனர். ஒரு பெண் மற்றும் ஒரு அரசு பள்ளி ஆசிரியர் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏற்கெனவே கொரோனாவால் விழுப்புரத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் நான்கு பேர் தற்போது உயிரிழந்தனர்.உயிரிழந்த பெண்ணின் இரண்டு மகன்களும் ஏற்கெனவே கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

;