tamilnadu

img

திடீர் மழையால் விவசாயிகள் பாதிப்பு: நிவாரணம் வழங்கக் கோரிக்கை

சென்னை ஏப்.10- தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் பெய்த திடீர் மழை சூறா வளிக் காற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் உரிய நட்ட ஈடு வழங்க வேண்  டும் என்று தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.  இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்மு கம் விடுத்துள்ள அறிக்கை வரு மாறு:-

தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் கடந்த சில நாட்களாகப் பெய்த கோடை மழை மற்றும்  சூறாவளிக் காற்றால் விவசாயி கள் பல்வேறு விதமான பாதிப்பு களுக்கு ஆளாகியுள்ளனர். மாநி லம் முழுவதும் நெல் கொள்  முதல் செய்யப்பட வேண்டு மென்று தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் தொடர்ந்து அரசை  வற்புறுத்தி வந்தது. ஆனால்,  அரசின் தாமதமான உத்தரவு  மற்றும் மாவட்ட அதிகாரிகள்  அந்த உத்தரவைச் செயல்ப டுத்தாத காரணத்தினால் மாநி லத்தின் பல்வேறு பகுதிகளில் பல்லாயிரக் கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து எதற்கும் உதவாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசின் அலட்சியமான போக்கே காரணமாகும். நெல்  கொள்முதல் நிலையங்க ளுக்குக் கொண்டு சென்று கொள்முதல் செய்யாமல் வீணா கிப் போன நெல் முழுவதற்கும் முழுமையான இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு வழங்கும் அறிவிப்பைத் தமிழக  அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.

சூறாவளிக் காற்று வீசிய தால் தேனி, திருச்சி, கரூர், பெரம்  பலூர், திருநெல்வேலி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அறு வடைக்குத் தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை சாய்ந்து கோடிக்க ணக்கான ரூபாய் இழப்புக்கு விவசாயிகள் ஆளாகியுள்ளனர். வாழை பாதிப்பு குறித்து உட னடியாக கணக்கெடுப்பு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழு இழப்பீட்டை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு சண்முகம் தெரி வித்திருக்கிறார்.