tamilnadu

img

விழுப்புரத்தில் பட்டியலின பெண்ணின் உடலை வைத்து 3 நாட்களாக போராடி வரும் உறவினர்கள்

விழுப்புரம் அருகே இறந்த பட்டியலினப் பெண்ணின் உடலை புதைக்க இடம் இல்லாததால் உறவினர்கள் 3 நாட்களாக போராடி வருகின்றனர்.  

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த கொட்டியாம்பூண்டி கிராமத்தில் 10க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நிலையான மயானம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்தச்சூழலில் துக்க நிகழ்வு ஏற்படும் போதெல்லாம் ஏரி, குளம், ஓடை போன்ற இடங்களிலேயே புதைத்தும் எரித்தும் வந்துள்ளனர்.

இதற்கிடையில்,  வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியருக்கு பலமுறை மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.  

இந்நிலையில் தான் கடந்த 18 ஆம் தேதி அமுதா என்ற பெண் இறந்துள்ளார். இறந்த அமுதாவின் உடலை புதைக்க மாற்றுச் சமூகத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் இறந்த பெண்ணின் உடலை புதைக்க இடமில்லாமல் 3 நாட்களாக உறவினர்கள் தவித்து வருகின்றனர்.  

இதையடுத்து நிலையான இடுகாடு அமைத்துத் தர வலியுறுத்தி, பட்டியலின மக்கள் இறந்த அமுதா பெண்ணின் உடலை வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 

;