சென்னை, மார்ச் 17- தமிழகத்தில் நெல் விவ சாயத்திற்கு அடுத்தபடியாக பெரும்பான்மையாக செய்து வரும் தென்னை விவசா யத்திற்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல் குறித்து தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்கு பிறகு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய பேரவை துணைத் தலைவர் பொள்ளாட்சி வி. ஜெயரா மன், “கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தென்னை சாகுபடி அதிகமாக இருந்து வருகிறது. மாநிலம் முழு மைக்கும் சுமார் 9 லட்சம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடந்து வருகிறது. இந்த தென்னை மரத்தில் ‘சுருள் வெள்ளை ஈ’ ஒவ்வொரு மாவட்டமாக படிப்படியாக பரவி தென்னை மரத்தின் ஓலைகளின் பின்புறத்தில் இருக்கும் பச்சையத்தை சாப்பிடுகிறது. இதனால் மூன்றில் ஒரு பகுதி மரங்கள் காப்பு திறனை இழந்துவிட்டது”என்றார்.
தென்னையை தாக்கிய இந்த வெள்ளை ஈ தற்போது, பப்பாளி, மாதுளை, கொய்ய பழம், தக்காளி, வெண்டை, கத்தரி போன்ற காய் கனி பணப்பயிர்களையும் தாக்க துவங்கியிருக்கிறது. எனவே, இந்த ஈயை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலி யுறுத்தினார். இதற்கு பதில் அளித்த வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு,“ வெப்பத்தின் தாக்கம் அதி கரிப்பதால் ‘சுருள் வெள்ளை ஈ’ 19 மாவட்டங்களில் தாக்கியிருப்பது உண்மை தான். இதை கட்டுப்படுத்த தென்னை மரத்தின் ஓலை களில் தண்ணீரை பாய்ச்ச வேண்டும். ரசாயனம் கலந்த பூச்சிக் கொல்லிகளை அடிப் பதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உத விகளையும் அரசு செய்து கொடுக்கும்” என்றார்.