tamilnadu

img

விழுப்புரம்: பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் 5 பேர் கைது  

விழுப்புரத்தில் 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.  

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெரியம்மாவின் வீட்டில் வசித்து வரும் 11 ஆம் வகுப்பு மாணவி ஒருவரை சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து 4 மாதங்கள் கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த சம்பவம் தொடர்பாக மோகன், மண்ணாங்கட்டி(எ) வெங்கடேசன், இளையராஜா ஆகிய 3 பேரை கடந்த 9 ஆம் தேதி செஞ்சி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.  

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக மேலும் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வெங்கடேசன்(25), பிரபு(37), பாபு(22), சத்யராஜ்(28), குப்பு(50) ஆகிய 5 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.  மேலும்  இந்த வழக்கில் இன்னும் சிலர் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனவும் அவர்களை பிடிப்பதற்கு தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதையடுத்து பாலியல் வன்புணர்வு, பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும் சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா எச்சரிக்கை விடுத்துள்ளார். 

;