வேலூர்,ஜூலை 17- வேலூர் தொகுதிக்கு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் புதனன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பணப்பட்டுவாடா புகாரில் வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில் மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 11-ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இதுவரை அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ.சி. சண்முகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ள னர். 7-ஆம் நாளான புதனன்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சண்முக சுந்தரத்திடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.