சிவகங்கை, ஜூலை 10- சிவகங்கை மாவட்டம் மானா மதுரை ஊராட்சி ஒன்றியம் புலவர சேரி கிராமத்தில் பொதுப்பணித் துறை கண்மாயில் குடிமராமத்து பணியில் ஊழல் நடைபெற்றுள்ள தாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதனால் தூர்வாரும் பணிக்கு ஜேசிபி இயந்திரத்தோடு வந்தவர்கள் திரும்பி சென்றனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.கே. தண்டியப்பன் கூறும்போது, “திருப்பாச்சேத்தி அருகே தஞ்சாக்கூர் ஊராட்சி புலவர்சேரி கிராமத்தில் பொதுப்பணித்துறை கண்மாய் உள்ளது. இந்த கண் மாய்க்கான விவசாயிகள் ஒன்றி ணைந்து பாசனதாரர்கள் சங் கத்தை உருவாக்கி குடிமராமத்து பணியை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். 17 பேர் கொண்ட பாசன விவசாயிகள் சங்கத்தை உருவாக்கி தலைவ ராக ராஜமணியை தேர்வு செய் துள்ளனர். இந்த ஊரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியசாமி என்பவர் 14பேர் ஆதரவோடு கணபதியம் மாள் தலைமையில் ஒரு பாசன தார்கள் சங்கத்தை பதிவு பதிவு செய்துள்ளனர். கணபதியம்மாள் சங்கத்தில் போலியான வர்கள் உள்ளனர். இறந்து போனவர்கள் பெயர், நிலமில்லாதவர்கள் பெயர் உள்ளது
ராஜாமணி தலைமையிலான பெரும்பான்மை பாசனதார்கள் கொண்ட சங்கத்தை பதிவு செய்ய மறுத்துள்ளனர். எந்த உத்தரவும் இல்லாமால் குடிமராமத்து திட்டத்தில் கண்மாயை தூர் வார வந்துள்ளனர். மக்கள் தடுத் துள்ளனர். காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது வேலைக்கான உத்தரவு இல்லை என கூறியிருக்கின்றனர். இது சட்டவிரோதமானது என்றார். மேலும் தண்டியப்பன் கூறு கையில்,” மானாமதுரை சட்ட மன்ற உறுப்பினர் நாகராஜனுக்கு ரூபாய் மூன்றை லட்சம் பணம் கொடுத்து ரூ. 72 லட்சம் குடிமரா மத்து திட்டத்தை வாங்கி வந்ததாக பாலசுப்பிரமணிய சாமி கூறுகி றார். இது குறித்து சட்டமன்ற உறுப்பினர் நாகராஜனிடம் கேட்ட தற்கு சாமி பொய் சொல்கிறார் எனக் கூறிவிட்டார் என்றார்.