விருதுநகர்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களை பாதுகாக்க வேண்டும். ஓய்வு பெற்றோர் பணப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். 240 நாட்கள் பணி முடித்ததற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். கொரோனாவால் நிகழும் மரணங்களுக்கு ரூபாய் 25 லட்சம் நிதி வழங்கவேண்டும். பேட்டா அரியர்ஸ் தொகைகளை வழங்க வேண்டும். தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டுமென வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.திருவில்லிபுத்தூரில் ராஜா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் சம்மேளனத் தலைவர் முனீஸ்வரன், முருகன், தங்கப்பழம் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் சிஐடியு, எல்.பி.எப் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள பணிமனை முன்பாகநடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு சார்பாக ராஜசேகர், எல்.பி.எப் சார்பில் செந்தில்குமார் தலைமை வகித்தனர். சிஐடியு சார்பில் முருகானந்தம், உதயகுமார், ரமேஷ்குமார். அனந்தராமன், வாசுதேவன். எல்.பி.எப் சார்பில்பாலுமகேந்திரா, இளமுருகு கலந்து கொண்டனர்.
மதுரை
மதுரையில் உள்ள அனைத்து பணிமனைகள் முன் ஆர்ப்பாட்டம் எல்பிஎப், சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப், எச்எம்எஸ், ஏஏஎல்எல்இ, டியூசிசி தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அரசு தலைமைபணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எல்பிஎப் பொதுச் செயலாளர் வி.அல்போன்ஸ், அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க (சிஐடியு) பொதுச் செயலாளர் ஏ.கனகசுந்தர் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.