விருதுநகர்:
சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவைபதவி நீக்கம் செய்ய வேண்டும். மருத்துவக் கல்லூரிகளில் கிராமப்புற மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு தமிழகஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் பழைய பேருந்துநிலையம் முன்பு நகர் செயலாளர்எல்.முருகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன், மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.பாலசுப்பிரமணயின், எம்.மகாலட்சுமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜி.வேலுச் சாமி, எம்.தாமஸ், பி.என்,தேவா, எம்.முத்துக்குமார், அ.விஜயமுருகன், வி.முருகன், ஆர்.சந்திரமோகன், எஸ்.லட்சுமி உட்பட பலர்பங்கேற்றனர்.