விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத் திற்கு வருகை தரும் தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிசாமி, நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமெனசமூக ஆர்வலர்கள், பல்வேறுஅரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தின்பாரம்பரிய தொழில்களான பஞ்சாலை, கைத்தறி, விசைத் தறி ஆகிய தொழில்கள் கடும்நசிவைத் சந்தித்து வருகின் றன. இந்தத் தொழில்களை சரிவிலிருந்து மீட்க வேண்டும். விசைத்தறி, ஆயத்தஆடைகள் உற்பத்தியாளர் களின் மின் கட்டணத்தை அரசுகுறைக்க வேண்டும். இவற் றிற்கான வரிகளையும் குறைக்கவேண்டுமென உற்பத்தியாளர்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கோரிக் கைகளை முதல்வர் நிறைவேற்ற வேண்டும்.
சிவகாசி மற்றும் அதைச் சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. பட்டாசுகளை வெளி நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலங்குளத்தில் சிறப்பாக செயல்பட்டு வந்த அரசு சிமிண்ட் ஆலையை புனரமைத்து மீண்டும் உற்பத்தியை தொடங்க வேண்டும். விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை நகராட்சிப் பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட கூட்டுக் குடிநீர்த்திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். மாவட்டத்தின் மிகவும்பின்தங்கிய பகுதிகளான நரிக்குடி, திருச்சுழி, காரியாபட்டி பகுதிகளில் அரசுகலைக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள் தொடங்க வேண்டும். இப்பகுதிகளில் தொழிற்பேட்டைகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே அறிவித்தபடி விருதுநகரில் பல்மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும். விருதுநகருக்கு வருகைதரும் முதல்வர் எடப்பாடிபழனிசாமி இந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதற் கான ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு வழங்கவேண்டும். மாவட்டம் பொருளாதார வளர்ச்சி பெற பட் டாசு, விசைத்தறி, கைத்தறி தொழில்களை மேம்படுத்த வேண்டும். ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு நடவடிக்கைஎடுக்க வேண்டுமென்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.