tamilnadu

img

சிலம்பப் போட்டியில் திருவில்லிபுத்தூர் சாதனை

விருதுநகர்:
தேசிய அளவில் ஆன்லைன் வழியாக நடைபெற்ற சிலம்பம் சுற்றும் போட்டியில் திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த 75 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். சிசா (SISA) ஸ்போர்ட்ஸ் சார்பாக தேசியஅளவில் ஆன்லைன் வழியாக ஒற்றை மற்றும் இரட்டை சிலம்பம் சுற்றும் போட்டி நடைபெற்றது. இதில் திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த நேதாஜி சிலம்பம் அகாதெமி சார்பாக மூன்று வயது குழந்தை முதல் குடும்பப் பெண்கள் வரை 75 பேர் பங்கேற்றனர். இதில் ஒரு பெண் குழந்தை பானை மீது பத்து நிமிடம் நின்று இரட்டைக் கம்பு சிலம்பம் சுற்றி சாதனை படைத்தது. 

;