tamilnadu

இந்தி திணிப்பை ஏற்க முடியாது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சிவகாசி, செப்.19- மொழி வாரியாக உள்ள இந்தியாவில் எந்த மொழியையும் எந்த மாநிலத்திலும் திணிக்க முயன்றாலும் பிரச்சனை ஏற்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரி வித்துள்ளார். சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “இந்தி திணிப்பு குறித்து  ரஜினி அவர் மனதில் உள்ளதை தெரி வித்துள்ளார். விருப்பப்பட்டால் அனைத்து மொழிகளையும் கற்றுக்கொள்ளலாம்” என்றார். மொழி வாரியாக உள்ள இந்தியாவில் எந்த  மொழியையும் எந்த மாநிலத்திலும் திணிக்க முயன்றால் பிரச்சனை ஏற்படும். அவரவர் மொழியை அந்தந்த மாநில மக்கள் நேசிப் பார்கள். அதேபோல் தமிழர்களாகிய நாமும்  தமிழை நேசிக்கிறோம். ஆட்சியில் உள்ள தால் இந்தி திணிப்பு குறித்து நாங்கள் வெளிப்  படைத் தன்மையாக பேசவில்லை என்ப தற்காக எங்களுக்கு தமிழ் மீது பற்றில்லை எனக் கூறுவது தவறான கருத்து. இந்தி திணிப்பு நிலை ஏற்பட்டால் தமிழ் மொழிக்கா கவும், தமிழ் உரிமைக்காகவும் அதிமுக போராழியாக நின்று போராடுவோம். தமிழுக்காக போராடுவோம், களம் காணு வோம். ஆனால் எந்த நிலையிலும் சமரசத்  திற்கு இடம் கொடுக்க மாட்டோம். தமிழகம்  நிமிர்ந்து நிற்க அதிமுக அரசு பாடுபடும் என்றும்  அவர் கூறினார். வணிக ரீதியாக ஆவின் பொருட்கள் உலக அளவில் விற்பனையாகி வருவது தமி ழுக்கும் தமிழ்நாட்டிற்கும் உள்ள பெருமை. ஆவினில் உச்சகட்ட வெண்மை புரட்சி ஏற்  பட்டு வருகிறது. நாள் ஒன்றிற்கு 38 லட்சம்  லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வரும்  நிலையில் 50 லட்சம் லிட்டராக உயர்த்து வதே இலக்காக உள்ளது. விவசாயத் திற்கு பின்னால் ஒரு மிகப்பெரிய தொழிலாக பால் உற்பத்தி தொழிலை உருவாக்க கறவை மாடுகள் வழங்கி பால் உற்பத்தியை அதிக ரிக்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அமைச்  சர் தெரிவித்தார்.

;