விருதுநகர், ஜூலை 22- தினம்தோறும் அதிகரிக்கும் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண் டும். சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். கொரோனா காலத்தில் வேலை இழந்து நிற்கும் ஓட்டு நர்களின் குடும்பத்திற்கு உரிய நிவா ரணம் வழங்கவேண்டும். காலாவதி யான சுங்கச்சாவடிகளை உடனடி யாக அகற்றவேண்டுமென்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி சிஐடியு உள்ளிட்ட அனைத்து சங்கங்கள் சார்பில் திருவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விஜயகுமார் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர்கள் வீர சதானந்தம், சந்தனம், சுப்பிரமணி யன், அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தின் மாவட்டப் பொரு ளாளர் ஜோதிலட்சுமி, சசிகுமார் உட்பட அனைத்து சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
மாதர்கள் ஆர்ப்பாட்டம்
கொரோனா பரிசோதனை மையங்களை அதிகப்படுத்த வேண்டும். பரிசோதனை முடிவு களை காலம் தாழ்த்தாமல் உடனடி யாக வெளியிடவேண்டும். நோயாளி கள் தங்கியுள்ள மருத்துவமனை களில் உணவு மற்றும் சுகாதாரத்தை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி சத்திரப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாதர் சங்க ராஜ பாளையம் கிழக்கு ஒன்றியச் செய லாளர் சஞ்சீவி நாச்சியார் தலைமை வகித்தார். அங்கன்வாடி பணியாளர் சங்க நிர்வாகி விமலா ரமணி, தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சோம சுந்தரம், முனியாண்டி உட்பட ஏராள மானோர் கலந்துகொண்டனர்.
தூய்மைப் பணியாளர்கள்
தூய்மைப் பணியாளர்களுக்கு கொரோனா கால சிறப்பு ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் இராஜ பாளையம் நகராட்சி முன்பு சங்கத் தலைவர் கணேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாரி யப்பன், குருசாமி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சிஐடியு தொழிற் சங்க நிர்வாகி சன்னாசி, சிஐடியு மாவட்டத் துணைத்தலைவர் மாரி யப்பன், மாவட்டக்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட தூய்மைப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்
சிஐடியு
தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்து 60 வயது நிரம்பிய தொழி லாளர்களுக்கு கடந்த பத்து மாதங்க ளாக ரூ.1 000 உதவித் தொகையை தமி ழக அரசு வழங்கவில்லை. 2017- ஆம் ஆண்டு உதவித் தொகைக்காக எழு திக் கொடுத்தவர்களுக்கும் தற்போது வரை உதவித் தொகை வழங்க வில்லை. கல்வி நிதி, திருமண நிதி, விபத்து மற்றும் இயற்கை மரண நிதி உடனடியாக வழங்க வேண்டும். நிறுத்தப்பட்ட பென்சனை உடனடி யாக வழங்க வேண்டுமென சிஐடியு சார்பில் விருதுநகர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எம்.மகா லட்சுமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி. ராமர், சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா மாவட்டப் பொரு ளாளர் வி.ஆர்.செல்லச்சாமி, மாவட்ட நிர்வாகிகள் எம்.அசோகன், ஜி. வேலுச்சாமி, ஆர்.பாலசுப்பிரமணி யன் உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரி டம் கோரிக்கை மனுவை வழங்க வேண்டும் என சிஐடியு தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனால், ஆட்சியர் மனு வாங்க மாட்டார் என காவல் துறையினர் தெரிவித்தனர். மனுவை வழங்காமல் செல்ல மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரி வித்தனர். இதையடுத்து 28 பெண்கள் உட்பட 55 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பட்டாசு விபத்து தொழிலாளர் குடும்பங்கள் கண்ணீர்
விருதுநகர் மாவட்டம், வெம் பக்கோட்டை அருகே உள்ள சிப்பிப் பாறையில் தனியார் பட்டாசு ஆலை யில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 தொழி லாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த னர். ஆனால், பாதிக்கப்பட்டோருக்கு ஆலை நிர்வாகம் உரிய நிவாரணத் தொகையை வழங்கவில்லை. மேலும், ரூ.4 லட்சம் மதிப்புள்ள காசோ லையை வழங்கியது. ஆனால், வங்கிக் கணக்கில் பணம் இல்லாத காரணத்தால் காசோலைகள் அனைத்தும் திரும்பி வந்தது. இத னால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், சிஐடியு தீப்பெட்டி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.மகா லட்சுமி, மாவட்டத் தலைவர் எம்.சி. பாண்டியன், சிஐடியு மாவட்டப் பொரு ளாளர் வி.ஆர்.செல்லச்சாமி ஆகி யோர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் காளிமுத்துவை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர். மனுவைப் பெற்றுக்கொண்ட நேர் முக உதவியாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்