tamilnadu

img

அடிப்படை வசதிகள் இல்லா வச்சக்காரப்பட்டி.... அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகர்:
விருதுநகர் ஒன்றியத்திற்கு உட்பட்டது வச்சக்காரப்பட்டி ஊராட்சி. இதில் ஆர்.ஆர்.நகர்உள்ளிட்ட சில கிராம பகுதிகள்உள்ளன. ஊராட்சி நிர்வாகம், பொது மக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர், தெரு விளக்கு,சாலை வசதி உள்ளிட்டவைகளை சரிவர செய்து தருவதில்லை. இதையடுத்து அனைத்துக் கட்சியினர், பொது மக்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்.ஆர்.நகரில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத் திற்கு திமுக முன்னாள் மாவட் டக் கவுன்சிலர் தேவராஜ், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பி.நேரு, சிபிஐ ஒன்றியச் செயலாளர் வி.பாலமுருகன், மதிமுக சார்பில் மோகன்குமார், விடுதலைசிறுத்தைகள் கட்சி சார்பில் லிங்கசாமி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

;