tamilnadu

விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி முக்கிய செய்திகள்

நெகிழி மறு சுழற்சி மையத்தில்  தீ வைத்த வழக்கு சட்ட விதியை மீறி மருத்துவரை பிணையில் விட்டதாக பெண் புகார்
விருதுநகர், அக்.20- விருதுநகர்-சிவகாசி சாலையில் ஊராட்சிக்கு சொந்த மான நெகிழி மறு சுழற்சி மையத்தில் தீ வைத்த வழக்கில் தனியார் மருத்துவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்ட னர். அதில், மருத்துவரை மட்டும், போலீசார் சட்டத்தை மீறி காவல் நிலைய பிணையில் விடுவித்தனர். இது விதிமுறை களை மீறிய செயல் என சிறையில் அடைக்கப்பட்ட அர்ச்சுணன் என்பவரின் மனைவி நாகமீனா, தமிழக முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உட்பட பலருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.  அப்புகார் மனுவில் அவர் கூறியதாவது : எனது கணவர் அர்ச்சுணன் ஓட்டுனராக உள்ளார். 3 மாதத்திற்கு முன்பு மருத்து வர் ரத்தினவேலுவின் மாமனாரிடம் ஓட்டுனராக பணி புரிந்தார். இதனால், மருத்துவருக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர் கூறுகின்ற வேலையையும் செய்ய துவங்கி னார். பின்பு, அந்த வேலையை விட்டு விலகி டிப்பர் லாரி ஓட்டி வந்தார். இந்நிலையில், சில வேலைகளை செய்யச் சொல்லி மருத்துவர் எனது கணவருக்கு அடிக்கடி போன் செய்தார்.  இந்நிலையில், சிவகாசி சாலையில் மகளிர் சுயஉதவிக் குழுவிற்கு சொந்தமான நெகிழி  மறுசுழற்றி மையத்தில் தீ வைத்தது தொடர்பாக எனது கணவரை போலீசார் அழைத்து விசாரித்தனர். அப்போது காவல்துறையிடம், எனது கணவர், டாக்டர் ரத்தினவேல் தான் அங்கு தீ வைக்க பலமுறை போனில் கூறினார் என உண்மையை கூறியுள்ளார். இதை யடுத்து மருத்துவரையும் அந்த வழக்கில் சேர்த்தனர். ஆனால், எனது கணவரை மட்டும், அக்.,19 ல் சிறையில் அடைத்த னர். இதில், சுயநலத்திற்காக தீ வைக்கச் சொன்ன மருத்து வரை காவல் ஆய்வாளர் காந்தி பிணையில் விடுவித்துள் ளார்.  இந்த வழக்கு அமர்வு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட வேண்டியது. இதில் பிணையில் வெளி வர முடியாது. அவ்வாறு இருக்க போலீசார், சட்ட விதிமுறைகளை மீறி சிறையில் அடைக்காமல் பிணையில் மருத்துவரை விட்டுள்ள னர்.  இதுகுறித்து நான் ஆய்வாளர் காந்தியிடம் கேட்ட போது, விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனை மருத்து வர் அன்புவேல், காவல்துறையில் உள்ள உயரதிகாரி கள்அவரை கைது செய்யக் கூடாது எனக் கூறியுள்ளனர் என தெரிவித்தார்.  எனவே, சட்டத்திற்கு புறம்பாக, சட்ட விதிகளை மீறி, அமர்வு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட வேண்டிய பிணை யில் வர முடியாத பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கூலி தொழிலாளியான எனது கணவர் மீது மட்டும் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்து விட்டு , ஒருதலை பட்சமாக மருத்துவர் ரத்தினவேலுவை மேற்கு காவல் நிலை யத்திலே ஜாமீனில் விட்ட ஆய்வாளர் காந்தி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் மற்றும் போலியான மருத்துவ சான்றிதழ் வழங்கிய டாக்டர் அன்புவேல் மீது சட்டப்படி நட வடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

களைகட்டும் தீபாவளி விற்பனை நெல்லையில் போக்குவரத்து நெரிசல்
திருநெல்வேலி, அக்.20- தீபாவளி பண்டிகையையொட்டி நெல்லை மாநகரப் பகுதிகளில் ஆடைகள், பொருள்கள் வாங்க வெளியூர் மக்கள் ஏராளமானோர் ஞாயிற்றுக்கிழமை குவிந்ததால் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. தீபாவளி பண்டிகை அக்.27ஆம் தேதி கொண்டாடப்படு கிறது. தீபாவளி வர்த்தகம் மட்டும் இந்தியாவில் சில ஆயி ரம் கோடிகளைத் தொடும். நிகழாண்டு தீபாவளியை யொட்டி, சாலையோரக் கடைகள் தொடங்கி பெரும் ஜவுளி நிறுவனங்கள், பேரங்காடிகள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்கள் விற்பனை நிலையங்களில் வியாபாரம் களை கட்டத் தொடங்கியுள்ளது. பொதுமக்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் ஆடைகள், பொருள்கள் வாங்க பல்வேறு வாகனங்களில் திருநெல்வேலி மாநகரப் பகுதி களுக்கு அதிக எண்ணிக்கையில் சனிக்கிழமை வந்தனர். இதனால், ஜவுளி நிறுவனங்கள் அதிகமுள்ள திருநெல்வேலி நகரம், வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை பகுதி களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  மாநகர காவல் துறை சார்பில் கடை வீதிகளில் கூடு தல் போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தீபாவளியை யொட்டி ஆடைகள், பொருள்கள் வாங்க மக்கள் அதிகள வில் வருவதால் நெல்லையில் போலீசார் கூடுதல் வசதி ஏற்படுத்த வேண்டும். வணிக வளாகங்களில் போதிய வாகன நிறுத்துமிடங்கள் இல்லை. இதனால் தெற்கு, வடக்குப் புற வழிச் சாலைகள், நயினார்குளம் கரையோரப் பகுதிகளில் வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி வைக்கப்படுவதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பொருள்காட்சித் திடல் உள்ளிட்ட பகுதிகளை ஒதுக்கி கண்காணிப்பு கேமராக்களுடன் பாதுகாப்பு வசதி அளிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட நிறுத்தங்களில் தனியார் பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றிச் செல்வதை போலீ சார் கண்காணிக்க வேண்டும் என்றனர்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் தொடக்கம்
தூத்துக்குடி, அக்.20- தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு தனியார் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், விமான நிலையத்தை விரி வாக்கம் செய்யும் வகையில், ஏறத்தாழ 600 ஏக்கர் நிலம் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்டு விமான நிலைய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.  இரவு நேர விமான சேவை உள்ளிட்ட கூடுதல் வசதிகளை மேம்படுத்தும் வகையில் ரூ. 151.15 கோடியில் விமான நிலை யம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. முதல்கட்டமாக ரூ. 4.79 கோடியில் நடைபெறும் பணிகளுக்கான பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, விமான நிலைய இயக்குநர் என்.சுப்ரமணியன் தலைமை வகித்து பணிகளை தொடக்கி வைத்தார். கட்டுமானப் பிரிவு இணைப் பொது மேலாளர் ராதாகிருஷ்ணன், விமான நிலைய மேலாளர் ஜெயராமன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.  அடுத்த ஆண்டு (2020) ஜனவரி மாதத்துக்குள் இந்த பணிகள் நிறைவடையும் என விமான நிலைய இயக்குநர் என்.சுப்ரமணியன் தெரிவித்தார்.