tamilnadu

விழுப்புரம், திருவண்ணாமலை, தேனி முக்கிய செய்திகள்

சீமான் மீது வழக்கு
விழுப்புரம்;அக்.14- விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி பற்றி சர்ச்சைக்குரிய வகை யில் பேசினார். இது குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள்  தலைவர் தங்கபாலு தலைமையில் காங்கிரஸ் மாநிலச் செயல்  தலைவர் கே. விஷ்ணுபிரசாத் எம்பி, முன்னாள் எம்எல்ஏ முரு கானந்தம், விழுப்புரம் மாவட்டத் தலைவர் பி.ரமேஷ் மற்றும்  அந்தக் கட்சியின் நிர்வாகிகள் மாவட்ட காவல்துறை கண்கா ணிப்பாளர் ஜெயக்குமாரிடம் புகார் மனு அளித்திருந்தனர்.  அதில் விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அது,  பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும். தேச ஒற்று மைக்கும், பாதுகாப்புக்கும் ஊறு விளைவிக்கும் செயல் என்றும் ராஜூவ் காந்தி குறித்து அவதூறு பரப்பி வருகிறார் என்றும் தெரிவித்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப் பதிந்து, அவரை கைது செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தனர். இதனையடுத்து சீமான் மீது 153, 504 ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் விக்கிரவாண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

ஓமன் நாட்டில் வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவை
விழுப்புரம்.அக்.14- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்  பில், ஓமன் நாட்டில் வீட்டு வேலை பணியாளராக பணிபுரிய 30 வயதுக்கு மேற்பட்ட 300 பெண் பணியாளர்கள் தேவைப்படு கிறார்கள். ஏற்கனவே வெளி நாடுகளில் வீட்டு வேலை செய்த  அனுபவமுள்ளவர்களுக்கு மாத ஊதியம் ரூ. 18 ஆயிரத்து 700 முதல் 22 ஆயிரத்து 440 வரை வழங்கப்படும். அனுபவம் இல்லாதவர்களுக்கு மாத ஊதியம் ரூ.17ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரத்து 700 வரையும் உணவு, இருப்பிடம், விமான பயணச் சீட்டு மற்றும் ஓமன் நாட்டின் சட்ட திட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகள் வேலை அளிப்போரால் வழங்கப்படும். விருப்பமும் தகுதியும் உள்ள விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி மற்றும்  அனுபவ சான்றிதழ், செல்லத்தக்க பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் ஒரு புகைப்படத்துடன் omchousemaid 2019@ gmail.com என்ற இணையதள முகவரி மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், எண் 42, ஆலந்தூர் சாலை, திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 600 032 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.மேலும்  விவரங்கள் www.omcmanpower.com என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அந்த செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.

டாஸ்மாக் ஊழியரை தாக்கி  கொள்ளை
திருவண்ணாமலை, அக்.14- திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. சனிக்கிழமை யன்று(அக்.12) இரவு கடையை மூடிவிட்டு, மேற்பார்வையா ளர் முத்துக்குமார் மற்றும் விற்பனையாளர் செல்வராஜி ஆகி யோர் வெளியில் வந்துள்ளனர். அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள் முகத்தில் துணி கட்டிக்கொன்டு கையில் கத்தியுடன் மேற்பார்வையாளர் முத்துக்குமாரின் இரண்டு கைகளையும் கத்தியால் வெட்டி விட்டு விற்பனை தொகை ரூ. 1  லட்சத்து 65 ஆயிரம் பிடுங்கி சென்றுள்ளனர். படுகாயமடைந்த  முத்துக்குமார் திருவண்ணாமலை அரசு மருத்துமனையி லும் பின்னர் சென்னை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்  காக அனுமதித்துள்ளனர். வெறையூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல்
கடமலைக்குண்டு,அக்.14-தேனி மாவட்டம், மயிலாடும்பாறை கிராமத்தில் தனியார் சர்க்கரை ஆலைக்கு சொந்தமான விவசாயப் பண்ணை அமைந்துள்ளது. இந்த பண்ணையில் உள்ள வீட்டின் முன்பாக  வளர்க்கப்பட்டு வந்த இரண்டு சந்தன மரங்களில் ஒன்றை  கடந்த மாதம் மர்ம நபர்கள் வெட்டி கடத்தி சென்றனர். இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 8 ஆம் தேதி இரவு பண்ணை வீட்டில் இருந்த மற்றொரு சந்தன மரத்தை மர்ம நபர்கள் வெட்டி கடத்தினர். இதுதொடர்பாக பண்ணையில் பணி யாற்றும் பூபதிராஜா நேற்று மயிலாடும்பாறை காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்து சந்தன மரம் வெட்டி கடத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.