பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள்: புதுவையில் மூட உத்தரவு புதுச்சேரி,அக்.29- புதுச்சேரியில் பயன்பா டற்ற ஆழ்துளை கிணறு களை மூட வேண்டும் என்று முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய முதலமைச்சர்,“ தமிழ் நாட்டில் திருச்சி மாவட்டத் தில் சுஜித் என்ற குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது,காப்பாற்ற தமிழக அரசு பெரும் முயற்சி எடுத்தது. கோடிக் கணக்கானோர் அந்த குழந்தை காப்பாற்றப்பட வேண்டும் என்று பிரார்த் தனை செய்தனர். ஆனாலும் முடியவில்லை. இதிலி ருந்து நாம் இரண்டு பாடங் களை கற்றுக் கொண்டுள் ளோம். ஒன்று இதுபோன்ற ஆழ்துளை கிணறுகளை கண்டுபிடித்து மூட வேண்டும், இன்னொன்று இதுபோன்ற ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தை களை மீட்டெடுக்க தொழில் நுட்பம் வேண்டும்” என்றார். புதுச்சேரியில் பயன் படாத, உபயோகத்தில் இல்லாத ஆழ்துளை கிணறு களை உடனடியாக மூட உத்த ரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை, தீய ணைப்பு துறை அதிகாரிகள் இதுபோன்ற கிணறுகள் எங் கெல்லாம் உள்ளதே அதனை கண்டறிந்து உடனே மூட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மரக்காணம் பகுதியில் பலத்த மழை: 3500 ஏக்கர் உப்பளம் பாதிப்பு மரணக்காணம்,அக்.29- வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோரப் பகுதியில் கன மழை நீடித்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியான அனுமந்தை, கீழ்ப்புத்துப்பட்டு, எண்டியூர், பிரம்மதேசம், நல்லாளம் பகுதியில் நேற்று இரவு விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி உள்ளது. மரக்காணம் பகுதியில் ஏராளமான கூலித் தொழிலாளர்கள் உள்ளனர். தொடர் மழையால் அவர்கள் வேலை இல்லாமல் வீட்டுக்குள் முடங்கினர். மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டார கடலோரப் பகுதியில் உப்பளங்கள் உள்ளது. இங்கிருந்துதான் தமிழகத்தின் பல்வேறு பகுதிக்கு உப்பு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சிலநாட்களாக கனமழை நீடித்து வருவதால் சுமார் 3,500 ஏக்கர் உப்பளங்களில் தண்ணீர் மூழ்கி உள்ளது. எனவே உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் உப்பள தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கிறார்கள். ஏற்றுமதிக்காக குவிக்கப்பட்ட உப்புகளும் மழையால் நாசமானது. இதனால் உப்பள அதிபர்கள் பாதிப்பு அடைந்து உள்ளனர்.