tamilnadu

திருவண்ணாமலை , வேலூர்,விழுப்புரம் முக்கிய செய்திகள்

கருக்கலைப்பு மையத்தில் சிசிடிவி கேமிரா காட்சிகள் ஆய்வு

திருவண்ணாமலை,மே 30-திருவண்ணாமலை அவலூர் பேட்டை சாலையில் உள்ள ஈசானிய லிங்கம் பகுதியில், சட்டவிரோதமாக கருக்கலைப்பு மையம் செயல்பட்டு வந்ததை காவல் துறையினர் கண்டறிந்து அந்த மையத்திற்கு சீல் வைத்துள்ளனர். அந்த கருக்கலைப்பு மையத்தின் நுழைவு பகுதியில் பொருத்தி இருந்த சி.சி.டி.வி. கண்காணிப்புக் கேமரா பதிவுகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். அதில், தினசரி கருக் கலைப்பு தொடர்பாக பெண்கள் பலர் வந்து செல்வதும், குறிப்பிட்ட சில நபர்கள் இவர்களை அழைத்து வருவதும் பதிவாகி உள்ளது. அவர்கள் இடைத்தரகர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந் துள்ளது. பின்னர் நந்த விசாரணையில், ஏராளமான கர்ப்பிணிகள் ஸ்கேன் ரிப்போர்ட்டுகள் சிக்கியிருக்கிறது.  கடந்த 10 ஆண்டுகளாக கருக்கலைப்பு மையம் செயல்பட்டிருப்பதால், பல ஆயிரக்கணக்கான பெண் சிசுக்கள் கருச்சிதைவு செய்யப்பட்டி ருக்கலாம்  என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கருக்கலைப்பு மையத்துடன் தொடர்புடைய இடைத் தரகர்கள், ஸ்கேன் சென்டர் கள் ஆகியவற்றையும் கண்டறியும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இங்கு கைப் பற்றிய செல்போன் எண் களின் விபரங்கள் அடிப்படையில் விசாரணை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. கருக் கலைப்பு செய்து கொண்ட பெண்களின் விபரங்களை எந்த வகையிலும் வெளியிடக்கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஆய்வக வசதியுடன் ஸ்ரீரங்க பூபதி பாலிடெக்னிக் கல்லூரி
விழுப்புரம், மே 30-விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி அருகே ஆலம்பூண்டியி லுள்ள ஸ்ரீரங்கபூபதி பாலிடெக்னிக் கல்லூரி, பொறியியல் கல்லூரிக்கான ஆய்வக வசதியுடன் இயங்கி வருகிறது. இது குறித்து கல்லூரி செயலர் ஸ்ரீபதி கூறியதாவது:-எங்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் டி.எம்.இ., மற்றும் டி.இ.இ.இ., ஆகிய பாடப்பிரிவுகள் ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் அண்ணா பல்கலைக்கழக அனுமதியுடன் நடந்து வருகிறது. பாலிடெக்னிக் கல்லூரியில் சேர மாணவர்களிடம் ஆண்டு கட்டணமாக ரூ. 20 ஆயிரம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.2018 ஆம் ஆண்டு நடந்த பாலிடெக்னிக் கல்லூரி பொதுத் தேர்வில் மாணவி சீதா இரண்டு பாடங்களிலும், மாணவி சோப்ரியா வேதியியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். இங்கு பயின்ற மாணவர்கள் 95 சதவீதம் பேர் இங்கு நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் பயனடைந்துள்ளனர். தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான ஆய்வக வசதியுடன் இயங்கி வருகிறது எங்கள் பாலிடெக்னிக் கல்லூரி.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேல் புதுப்பாக்கத்தில் விதொச கிளை உதயம்
வேலூர், மே 30-வேலூர் மாவட்டம் மேல் புதுப்பாக்கம் கிராமத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க கிளை உதயமானது. தலைவராக கலா, செயலாளராக விஜயலட்சுமி, பொருளாளராக ரோஸ்மேரி உள்பட 8 பேர் கொண்ட குழு தேர்வு செய் யப்பட்டது.இக்கூட்டத்தில் விதொச மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுபதி, சம்பத், ஆனந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமுஎகச - திண்ணை 122 நிகழ்வு

வந்தவாசி, மே 30-தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் வந்தவாசி கிளை சார்பில் திண்ணை 122நிகழ்வுக்கு மாவட்டத் தலைவர் கவிஞர்ஆரிசன்  தலைமை தாங்கினார். இரா.சிவக்குமார், தமுஎகச மாவட்டக்குழு உறுப்பினர் சாத்தமங்கலம் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் பேரா.பிரபாகரன் வரவேற்றார். தென்னாங்கூர் அரசுகலை, அறிவியல் கல்லூரி முதல்வர்முனைவர்ச. யுவராஜன் பங்கேற்று ‘குழந்தை மனமும் பெற்றோர் குணமும்’ எனும் தலைப்பில் உரையாற்றினார். அப்போது,“ சமுதாயத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள உறவுமுறைகளில் மிகவும் மகத்தானது பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலான உறவே என்றும், தற்போதையச் சூழலில் பெற்றோர், பிள்ளைகளுக்கிடையேயுள்ள அன்பு, நட்பு, இறுக்கம், எண் ணங்களின் பரிமாற்றம் அனைத்திலும் அதிக இடை வெளி ஏற்பட்டுள்ளதையும் சுட்டிக் காட்டினார்.நிறைவாக கிளைத் தலைவர் ரவி நன்றி கூறினார். நிகழ்வை தமுஎகச துணைத் தலைவர் பூங்குயில் சிவக்குமார் ஒருங்கிணைத்தார். இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் எட்டியப்பன், பாடகர் தென்னாங்கூர் ரஜினி, முனைவர் ஹேமமாலினி, ராதாகிருஷ்ணன் உட்பட பல்வேறு சங்க நிர்வாகிகள், அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.முன்னதாக தென்னாங்கூர் கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் கவிதை வாசித்தனர்.