சென்னை, நவ.18- தமிழகம், புதுவையில் செவ்வாயன்று (நவ.19) ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பி ருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச் சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரி விக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சி யஸ், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகும். கடந்த 24மணி நேரத்தில் அதிக பட்சமாக தரங்கம்பாடியில் 3 சென்டிமீட்டர், பாப நாசம், சிவகிரி மற்றும் தென்காசியில் தலா 2 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.