சிவகாசி, அக்.23- சிவகாசி அருகே உள்ளது நதிக்குடி. இங்கு, தனியா ருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு ஏரா ளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இங்கு பெரும்பாலும், பேன்சி ரக வெடிகள் தயாரிக்கப்படு கிறது. தீபாவளிப் பண்டிகை நெருங்குவதால் பட்டாசு தயா ரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில் செவ்வாயன்று ராக்கெட் வெடி தயாரிக்கும் பணி யில் தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராமல் ஏற்பட்ட உராய்வின் காரண மாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூன்று தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இதில், பட்டாசு தயாரிக்கும் ஒரு அறை முற்றிலும் சேத மடைந்தது. இந்த விபத்தில், படுகாயமடைந்த கணேசன், சுதா, முருக சரஸ்வதி ஆகிய தொழிலாளர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மேலும் தீ பரவாமல் இருக்க பட்டாசு தயாரிப்பு அறைகளில் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். விபத்து தொடர்பாக மாரனேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.