சிதம்பரம், நவ. 15- சிதம்பரம் அருகே உள்ள துணிசிரமேடு ஊராட்சியில் உள்ளது பொன்னேரிக்கரை கிராமம். முறையாக தூர் வாரப்படாத இந்த ஏரி தற்போது பாசனத்திற்கு திறக்கப்பட்டுள்ளதால் பொன்னேரியின் அக்கரை யில் உள்ள பூங்குடி கிராமம் அருகே 300-க்கும் அதிகமான ஏக்கர் நிலத்தில் (மதுரா) துணிசிரமேடு கிராமத்தினர் தற்போது சம்பா நடவு மற்றும் விவசாய வேலைகள் செய்து வருகிறார்கள். பொன்னேரிக் கரையில் இருந்து அக்கரைக்கு செல்ல நடைபாலம் இல்லாததால் கிராம மக்கள் ஆபத்தான நிலையில் தினமும் நீந்திச் செல்கின்றனர். பல ஆண்டு களாக அப்பகுதியில் நடை பாலம் ஒன்று அமைத்து தரக் கோரியும் அதிகாரிகள் இதனை கண்டு கொள்ள வில்லை. இதனால் தினமும் அக்கரைக்கு கிராம மக்கள் நீந்திதான் செல்ல வேண்டி யுள்ளது. அப்படி நீந்திச் செல்லும் போது சில இடங்களில் அதிக அளவில் பள்ளம் உள்ளதால் சிலர் தண்ணீரில் மூழ்கி விடுகின்றனர். கடந்த ஆண்டில் பொன்னேரி கரையைச் சேர்ந்த நாராயண சாமி மனைவி பூங்கோதை (60) மூச்சுத்திணறல் ஏற்பட்டு அக்கரைக்கு சென்று மயங்கி விழுந்து உயிரி ழந்தார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் விவசாய வேலை செய்ய தலையில் கூடை உள்ளிட்ட பொருட்களை எடுத்துக் கொண்டு நீந்திச் செல்லும் போது ஒருவர் நீரில் மூழ்கி யுள்ளார். அருகில் இருந்த வர்கள் அவரை காப்பாற்றி யுள்ளனர் . இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் கீரப்பாளையம் ஒன்றியச் செயலாளர் வாஞ்சி நாதன் கூறுகையில்,“ பொன் னேரிக் கரை பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் விவசாயப் பணிகளுக்காக அக்கறையுள்ள பூங்குடி கிராமத்திற்கு மூன்று கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டும். இதனால் ஏரியில் இறங்கி ஆபத்தான நிலை யில் தினமும் நீந்தி சென்று வருகிறார்கள். மக்களின் நலன் கருதி ஒரு நடை பாலம் அமைத்து தரக்கோரி நீண்ட காலமாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி என பலருக்கும் மனுகொடுத்துள்ளனர். இந்த பிரச்சனையில் அதி காரிகள் மேலும் காலதாமம் செய்தால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவதை தவிர வேறு வழியில்லை” என்றார்.