திருவெண்ணெய்நல்லூர் அக். 14- விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலை செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகள் ஆலை நிர்வாகம் தங்களுக்கு தர வேண்டிய 50 கோடி ரூபாய் பாக்கித் தொகையை உட னடியாக தர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் திங்களன்று (அக்டோபர் 14) ஆலையின் உள்ளே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு விவசாயிகள் வெட்டி அனுப்பிய கரும்புக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகை சுமார் ரூ. 50 கோடிக்கு உள்ளது. இதில் 2004-2005 லாப பங்குத் தொகை ரூ. 3 கோடியே 50 லட்சமாகும். 2014-2015 எஸ்ஏபி பாக்கித்தொகை ரூ. 11 கோடியே 35 லட்சத்து 41ஆயிரம், 2015-2016 எஸ்ஏபி பாக்கித் தொகை ரூ. 10 கோடியே 14 லட்சத்து 59 ஆயிரம், 2018 -2019 எப்ஆர்பி பாக்கி ரூ. 20 கோடியே 50 லட்சம், 2018-2019 ஊக்கத் தொகை பாக்கி ரூ.4 கோடியே 50 லட்சம் என மொத்தம் பாக்கியுள்ள 50 கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் எனக்கோரி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆலையின் உள்ளே அலுவலக வாயிலை மறித்து கரும்புகளுடன் உள்ளி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆலையின் அலுவலக பணிகள் அத்தனை யும் ஸ்தம்பித்தன. பின்னர் ஆலையின் மேலாண் இயக்குநர் வெளியே வந்து போராட் டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் ‘சில நாட்க ளில் பாக்கித் தொகையை பெற்றுத்தருவ தாக’ உறுதி அளித்ததால் போராட்டத்தை விவ சாயிகள் ஒத்தி வைத்தனர். இப்போராட் டத்திற்கு ஆலை சங்கத் தலைவர் ஜி.சாரங்க பாணி தலைமை தாங்கினார். சங்கச் செயலா ளரும் இயக்குனருமான எஸ்.ஜோதிராமன், பொருளாளர் பி.கொடியான், துணைத் தலை வர் இ.எம்.எஸ்.திருமால் உள்ளிட்ட ஏராள மான விவசாயிகள் இப்போராட்டத்தில் பங் கேற்றனர்.