tamilnadu

விருதுநகரில் கொரோனா தொற்றை கண்டறிய ஒரே இயந்திரம், ஒரே டெக்னீஷியன் புதிய இயந்திரம் வாங்கப்படும் சிறப்பு அதிகாரி தகவல்

விருதுநகர், ஜூன் 27- விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தீ நுண்மியை கண்ட றிய விரைவில் புதிய இயந்திரம் ஒன்று வர உள்ளதாக கண்கா ணிப்பு அலுவலரும், சிறப்பு அதி காரியுமான மதுமதி தெரிவித்தார். விருதுநகர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் கொரோனா நோய் தொற்றை தடுப்பது மற் றும் நோயால் பாதிக்கப்பட்டவர் களை மீட்பது குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரா. கண்ணன் தலைமையில் நடை பெற்றது. இதில் சிறப்பு அதிகாரி மதுமதி, மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் பெருமாள் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். இதையடுத்து, செய்தியாளர் களை சந்தித்த சிறப்பு அதிகாரி மதுமதி, “கொரோனாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக் கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 17 ஆயிரத்து 493 பேர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 1943 பேரின் முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளது. விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவ வார்டில் உள்ள மருத்துவர்கள் மற்றும் கர்பினிப் பெண்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. எனவே, பிரசவ வார்டு தற்காலிகமாக மூடப்படும். கர்ப்பிணிப் பெண்கள் வேறு பகு திக்கு மாற்றம் செய்யப்பட உள்ளனர். விருதுநகர் தலைமை மருத்து வமனையில் பரிசோதனை செய் வதற்கான கிட்டுகள் அதிகம் உள் ளது. ஆனால், ஒரு இயந்திரம், ஒரு டெக்னீசியன் மட்டுமே உள்ள தால் முடிவுகள் வெளியாக நான்கு  நாட்கள் ஆகிறது. இரண்டு நாட்க ளுக்குள் முடிவுகளை அறிவிக்க புதிய பரிசோதனை இயந்திரம் வாங்கப்பட உள்ளது. பயிற்சி பெற்ற டெக்னீசியன்கள் நியமிக் கப்பட உள்ளனர். இதுவரை தொற்று பரவலாகவில்லை. அவ்வாறு வந்தாலும் 1000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. தனி யார் கல்லூரிகளின் விடுதிகளில் உள்ள நான்காயிரம் ஆயிரம் படுக் கைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.