tamilnadu

கொரோனாவிலும் “கூட்டம்” 58 தீர்மானங்கள் நிறை வேற்றி சாதனை

திருவில்லிபுத்தூர்,மே 30- கொரோனா காலத்திலும் விருதுநகர் மாவட்டம் வத்தி ராயிருபப்பு ஒன்றியக் கவுன் சில் கூட்டம் நடைபெற்றது. ஒன்றியக்குழுத் தலைவர் சிந்து முருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அளிக்கக்கூடிய வகையில் 58 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றியத் திற்குட்பட்ட ஊரணிகள் தூர்வாருதல், சுகாதாரம், சாலை வசதி, குடிநீர் உள்ளிட்ட மக்களின் அடிப் படை தேவைகள் குறித்து அதிமுக உறுப்பினர் பொன் னியம்மள், திமுக உறுப்பி னர்கள் கண்ணன் ரவி கேள்வி எழுப்பினர். ஒன்றியக்குழு தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பதிலளித்தனர்.