விழுப்புரம், நவ.13- செஞ்சி அருகே செவ லப்புரை தடுப்பு அணையி லிருந்து தண்ணீர் செல்லும் வாய்க்கால் அன்னமங்கலம் அருகே கடந்த சில நாட்க ளுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. இதிலிருந்து வெளியேறிய தண்ணீர் சங்கராபரணி ஆற்றில் கலந்து வீடூர் அணைக்கு சென்றது. இதுகுறித்த செய்தி படத்துடன் ‘தீக்க திர் நாளேட்டில்’ வெளி யிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தற்காலிகமாக மணல் மூட்டைகள் கொண்டு உடைப்பை சரி செய்தனர். இதனால் அப்பகுதி விவ சாயிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர். ஆனாலும், உடைப்பை நிரந்தரமாக சரி செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.