விருதுநகர், ஜூன் 15- விருதுநகர் அருகே எல்கைப்பட்டியில் விதிமுறைகளை மீறி இயங்கும் தனியார் கல்குவாரியை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் புகார் மனு அளித்தனர். மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: விருது நகர் அருகே உள்ளது சீனியாபுரம். இங்கு 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்கு தனியார் கல்குவாரி குடி யிருப்பில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் இயங்கி வருகிறது. அரசின் விதிமுறைப் படி 300 மீ தூரம் இருக்க வேண்டும். இங்கு சுமார் 80 அடி ஆழத்திற்கு கற்கள் எடுக்கப் பட்டு வருகிறது. அனுமதிக்கப்பட்ட இடத்தை விட்டு 70 மீட்டருக்கு முன்பே வெடி வைத்து கற்கள் எடுக்கப்படுகிறது. கற்கள் குடியிருப்புகள் மீது அடிக்கடி விழுகிறது. பெரும் அதிர்வுகளும் வீடுகளில் ஏற்படு கிறது. இதுகுறித்து கிராம நிர்வாக அலு வலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் தெரி வித்தும் உரிய நடவடிக்கை இல்லை. விதி முறைகளை மீறி செயல்பட்டு வரும் தனி யார் கல்குவாரியை உடனடியாக மூட வேண் டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.