tamilnadu

img

சாலையில் பள்ளம்... பொதுமக்கள் அவதி

உளுந்தூர்பேட்டை ஆக. 10- உளுந்தூர்பேட்டையில் அமைந்துள்ள காயிதே மில்லத் தெருவில் கால்வாய் தண்ணீர் செல்லும் சிறு பாலம் உடைந்து நொறுங்கி உள்ளதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். உளுந்தூர்பேட்டை நக ரில் ஏழாவது வார்டில் காயிதேமில்லத் தெரு அமைந்துள்ளது. பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவியர், அவர்  கள் செல்லக்கூடிய வேன்கள் மற்றும் ஆட்டோக்கள், இரு  சக்கர வாகனங்கள் திரு வெண்ணெய்நல்லூர் சாலை யிலிருந்து நகருக்குள் வரக்  கூடிய பொதுமக்கள் என ஏரா ளமானோர் பயன்படுத்தும் தெருவாக இந்த காயிதே  மில்லத் தெரு அமைந்துள் ளது. தெருவின் நடுவில் இரு புற கழிவுநீர் கால்வாயை இணைக்கும் சிறு பாலம் உள்ளது. கடந்த மாதம் இப்  பாலம் மேல்புறம் இடிந்து கான்கிரீட் உள்ளே வாங்கி யுள்ளது. இதனால் பிரதான  போக்குவரத்திற்கு பயன்ப டும் இச்சாலை தற்போது பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் சாலையாக மாறியுள்ளது. மேலும் இந்த  பாலம் இடிந்த காரணத்தி னால் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன்கள் கடந்த ஒரு மாதமாக இப்ப குதிக்கு வர இயலவில்லை. இதனால் பள்ளி செல்லும் சிறு குழந்தைகள், மாணவ, மாணவியர் பெரும் பாதிப் படைந்துள்ளனர். இது தொடர்பாக இப்  பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்து  பழுதை நீக்க சொன்ன போது ‘இச்சிறு பாலத்தை புதிதாகத்தான் அமைத்திட வேண்டும், அதற்கு கால மாகும்’ என்று பேரூராட்சி நிர்வாகத்தினர் பதில் கூறு வதாக தெரிவித்தனர். அதி காரிகள் சரி செய்வதற்குள் யாருக்கு என்ன ஆபத்து நேருமோ என்று இப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். எனவே உடனடி யாக இந்த சிறு பாலத்தை புதுப்பித்து தர வேண்டும் என  சமூக ஆர்வலர்கள் கோரி யுள்ளனர்.